Tuesday, October 7, 2008

என்னோடுஉன் கடிதமும்

பத்திரமாய் இருக்கிறது

பாதுகாப்புப் பெட்டறையில்

உன் கடிதம்.

அவ்வப்போது எடுத்துப் பார்க்கிறேன்

பிரிக்கும்போதே மடிப்புகளில் விரிசல்

பழுப்பேறி விட்டாலும்

பழைய தாளிலும் உன்பளிங்கு உடல் வாசம்

முத்தான கையெழுத்து உன்முறுவலைப்போல.

ஒவ்வொருவருக்கும் கையெழுத்துப்பிரத்தியேகமாம்

தனி மனித அந்தரங்கம்மன நிஜத்தின் நிழல்

கையெழுத்தில்அவரவர் தம் தலையெழுத்தைக்கூறலாமாம்

எனக்குத் தெரியவில்லை.

சில விஷயங்கள் தெரியாமலிருப்பதே நல்லது தான்.

கவிதையாய் எழுதிவிட்டுக்கடிதமென்று சொல்வாய்.

கவிதைக்குத்தான்பொய் அழகு

வாழ்க்கைக்கு அல்ல உண்மைகளை உதறிவிட்டு

ஒருநாள் சென்றுவிட்டாய்.

மறந்தே போனாயாமறைந்தே தான் போனாயா? என்றாவது

நீவருவாயென்றுகாத்திருக்கும்

என்னோடுஉன் கடிதமும்.

1 comments:

Tech Shankar said...

என்னமாய் உருகி எழுதி இருக்கீங்க. பாராட்டுகள்